தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் ஓரினச் சேர்க்கைக்கு ஆதரவாக கருத்து தெரிவித்ததற்கு விளக்கம் அளிக்குமாறு நடிகர் அமீர் கானுக்கு சண்டிகர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
கடந்த மாதம் 19-ம் தேதி ஒளிபரப்பான ‘சத்யமேவ் ஜெயதே’ நிகழ்ச்சியில பங்கேற்ற நடிகர் அமீர் கான், ஓரினச் சேர்க்கை விவகாரம் தொடர்பா சுப்ரீம் கோர்ட் அளித்த தீர்ப்புக்கு மாறுபட்ட வகையில ஓரினச் சேர்க்கையை நியாப்படுத்துவது போல பேசியதாகவும், தடுக்கப்பட்ட குற்றத்த நியாயப்படுத்துவதோடு, இது கோர்ட்டை அவமதிகின்ற செயலாகும் என்று அரியானா மாநிலத்தைச் சேர்ந்த பெண் வழக்கறிஞர் மந்தீப் கவுர் என்பவர் சண்டிகர் உரிமையியல் நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருக்கிறார். .
இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் வர்ற டிசம்பர் 19-ம் தேதிக்குள் இது தொடர்பாக விளக்கம் அளிக்குமாறு நடிகர் அமீர் கானுக்கு நோட்டீஸ் அனுப்பும்படி உத்தரவிட்டு இருக்கிறது.