மேற்கு ஆப்பிரிக்க நாடான லைபீரியாவில் இருந்து அமெரிக்காவில் உள்ள டல்லஸ் நகருக்கு வந்த தாமஸ்துங்கன் (42) என்பவருக்கு கடுமையான காய்ச்சல் ஏற்பட்டுள்ளது.
மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவரை பரிசோதித்த போது எபோலா நோய் தாக்கி இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து அவரை தனிமைப்படுத்தி மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனால், சிகிச்சை பலனின்றி தாமஸ்துங்கன் உயிரிழந்தார்.
இதன் மூலம் அமெரிக்காவில் முதன் முதலில் எபோலா நோய்க்கு ஒருவர் பலியாகி இருக்கிறார். இதனால் மற்றப் பகுதிகளுக்கும் இந்த நோய் பரவலாம் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.